Sunday, April 30, 2017

“காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டி­யது அவ­சியம் முடி­யா­விடின் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும்“

 by Priyatharshan on 2017
பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் அந்தக்  காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு காணி­களை மீள வழங்க முடி­யா­விடின்  காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். இதுவே ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­பா­டாகும்  என்று   ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­மெக்­குலே தெரி­வித்தார். 
நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­பட்டு வரு­கி­றது. அந்­த­வ­கையில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் காணி­களை விடு­விக்கும் கார­ணி­யா­னது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதா­வது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இந்தக் காரணி  முக்­கிய பங்­காற்றும்   என்றும்  ஐ.நா. வின்  இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­மெக்­குலே சுட்­டிக்­காட்­டினார்.  
வடக்கு மாகா­ணத்தில் காணி­களை இழந்த மக்கள் அவற்றை மீள பெற்றுக் கொடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றமை தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­மெக்­கு­லே­யிடம் பிரத்­தி­யே­க­மாக கேசரி வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
ஐ.நா.வின் வதி­விடப் பிர­தி­நிதி உனா­மெக்­குலே இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில், 
எந்­த­வொரு சமூ­கத்­திலும் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்­கான உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே எனது கருத்­தாகும். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் காணிப் பிரச்­சி­னை­யா­னது ஒரு பாரிய விவ­கா­ர­மாக காணப்­ப­டு­கி­றது. இது நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. காணி­களின் உண்­மை­யான உரி­மை­யா­ளர்கள் அவை எப்­போது தமக்கு கிடைக்கும் என்­பதை தெரிந்து கொள்­வ­தற்­கான உரி­மையை கொண்­டுள்­ளனர். 
இந்த காணி விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­வ­தாக நாங்கள் நினைக்­கின்றோம். இந்த வாரம்­கூட ஒரு கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­ற­தாக அறிந்தோம். அந்த கலந்­து­ரை­யா­டல்­களின் முடி­வுகள் அல்­லது விளை­வுகள் என்­ன­வென்­பதை அறிந்து கொள்ள நாங்கள் ஆவ­லாக இருக்­கின்றோம். 
கேள்வி பொது மக்­களின் காணி­களை விடு­விக்­கு­மாறு ஐக்­கிய நாடுகள் சபை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோ­கிக்­குமா?
பதில் ஐக்­கிய நாடுகள் சபை இலங்கை  அர­சாங்­கத்­துடன் பணி­யாற்றி வரு­கி­றது. அதா­வது நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­பட்டு வரு­கி­றது. நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் காணி­களை விடு­விக்கும் கார­ணி­யா­னது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதா­வது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இது முக்­கிய பங்­காற்றும் கார­ணி­யாகும்.
காணிகள் விடு­விக்­கப்­பட்­டதும் நாங்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு மக்­க­ளுக்­கான தேவை­களை பூர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுப்போம். அந்த மக்­களின் வாழ்க்­கையை இயல்பு நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டுவோம். காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அல்­லது காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். 
கேள்வி ஆனால் போராட்டம் நடத்தும் பாதிக்­கப்­பட்ட   மக்கள் தங்­க­ளுக்கு நட்­ட­ஈடு வேண்டாம் என்றும் தமது காணி­களே வழங்­கப்­பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு பார்க்கிறது? 
பதில் மக்களின் பக்கம் இருந்து பார்க்கும்போது அந்த தர்க்கத்தில் நியாயம் இருப்பதை நாங்கள்  ஏற்றுக் கொள்கிறோம். அதில் ஒரு பொருள் உள்ளது. ஆனால் உலகில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் காணிகள் அரச தேவைக்காக பெறப்பட்டால் அவற்றுக்கு நட்டஈடு வழங்கலாம் என்பதும்  பெறுமதியானதொரு தர்க்கமாகும் என்றார்.