Saturday, August 30, 2014

பாதாளக் குழுக்களை கைது செய்வதாயின் அலரி மாளிகைக்குச் சென்றால் பிடிக்க முடியும்; ஐ.தே.க. எம்.பி. அஜித்குமார
பா.கிருபாகரன், ந.ஜெயகாந்தன்-2014-08-21

பாதாளக் குழுக்கள், குற்றவாளிகளை கைது செய்யவேண்டுமெனில் அலரி மாளிகைக்குச் சென்றால் ஒட்டுமொத்தமாகப் பிடிக்க முடியுமென ஜனநாயக தேசியக் கூட்டணியில் சுயாதீனமாக இயங்கிவரும் எம்.பி.யான அஜித்குமார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இலத்திரனியல் அடையாள அட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அஜித்குமார.