Wednesday, October 1, 2014


Nalliah Kumaraguruparan-2014September 29 
Like
தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றியே நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும்மக்களாணையை வெற்றிகொள்ளமுடியும்
-மாதுலுவாவே சோபித தேரர்.
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய உங்கள் நிலைப்பாடு பற்றி . நீங்கள் கூறவேண்டும். நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது
-சோபித தேரரிடம் கலாநிதி.என்.குமரகுருபரன் வலியுறுத்து
.தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றியே நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும் மக்களாணையை வெற்றிகொள்ளமுடியும்- மாதுலுவாவே சோபித தேரர்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எனும் அமைப்பின் கீழ் கோட்டே நாக விஹார விகாரையில் பல் வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்துவரும் மாதுலுவாவே சோபித தேரர் இன்று திங்கள் 29/09/2014 காலை ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன்,மற்றும் லிபரல் கட்சி செயாலாளர் கமல் நிஸ்ஸங்க ,புதிய ஜனநாயக கட்சி லலித் முன்னணி செயலாளர்கள் ஷியாமலீ பெரேரா மற்றும் ஷலிலா முனசிங்க்ஹ ஆகியோரை சந்திப்பிற்ற்கு அழைத்திருந்தார் . இங்குபேசிய பலரும் சோபித தேரர் தான் பொதுவேட்பாளராக முடியும் .யு என் பி தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்டது .காலத்தைக் கடத்தாது செயற்பாட்டில் இறங்க வேண்டும், என்பதை வலியுறுத்தினர் .
ஆனால் கலாநிதி குமரகுருபரன் தனது கருத்து சற்று வேறுபட்டது எனவும்
ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது.ஆனால் தேசிய ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் மக்கள் கட்டாயம் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தவறமாட்டார்கள்
இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய உங்கள் நிலைப்பாடு பற்றிநீங்கள் கூறவேண்டும் மாறாக அரசியல் தீர்வுட்பட்ட பல பிரச்சனைகளுக்கு தமிழினம் முகம் கொடுக்கின்றது.என குமரகுருபரன் வலியுறுத்தினார் .

ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்ரமசின்ஹ வும் போட்டியிடும் போது அது தான் வலிமையுள்ள தாகவும் ஆட்சி மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்றார் .ரணில் தமிழ் முஸ்லீம் மக்கள் தம் பிரச்சனை களை ஐயந்திரிபற அறிந்த வர். எந்தவகையிலும் நாம் எதிர் நோக்கும் தேசியப்பிரச்சினை யின் தீர்வுக்கு உத்தரவாதமின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றுவதற்காக மட்டும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாது.இது யதார்த்தம், நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றுருறைத்தார் குமரகுருபரன் . அது மட்டுமன்றி ஐ.தே .க போட்டியிட முடிவெடுத்த பின் நீங்கள் போட்டியிடுவதாயின் எதை ,எவரை மாற்ற வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதை அவரை வெற்றிபெற வைப்பதாக அமையும் எனவும் குமரகுருபரன் அங்கு தெரிவித்தார். நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்ற்கு இடமில்லை ஆனால் யாருக்கு வாக்களிப்பதேன்பதை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் கருத்திற்ற்கு எடுக்கப்படவேண்டும் என்றார். ஆனாலும் தாம் ஒரேஒரு காரியத்தை முன்வைத்தே நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்பதற்காகவே பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்க முடியும் என் சோபித்த தேர தெரிவித்துள்ளார்