Friday, January 9, 2015

[ வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2015, 02:33.39 AM GMT ]
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மைத்திரி இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார்
பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது எதிரணியில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மகிந்தவை விட முன்னிலையில் இருந்து வருகிறார்.
அநேகமாக வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதாகவும் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் முன்னணி வகிக்கின்றார்.
இதன் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை பெரும்பாலும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

Maithri takes the lead

2015-01-09 
Common opposition candidate Maithripala Sirisena who contested from New Democratic Front (NDF) is well ahead by a majority of 92411 votes than his main opponent UPFA candidate and incumbent President Mahinda Rajapaksa according to elections results officially released so far.
Sirisena has polled a total of 339117 votes (57.15%) while President Mahinda Rajapaksa has polled a total of 246706 votes (41.53%) so far.