Friday, January 9, 2015

[ வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2015, 01:18.56 AM GMT ]
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.
மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
ரணிலுடன் கடைசி நேரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டுச் செல்வதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது வாசஸ்தலத்துக்கு அழைத்து, அந்த கடைசித் தருணங்களில் சகல அதிகாரங்களையும் அவரிடம் முறையாக ஒப்படைத்து விட்டே அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.